லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண், லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண், லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. முருகம்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி -அருக்காணி தம்பதியர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, எதிரே வரும் நபருக்காக, வாகனத்தை, வேலுச்சாமி நிறுத்த முயன்றபோது, நிலைதடுமாறி அருக்காணி கீழே விழுந்தார். இதில், லாரியின் சக்கரம் உடலில் ஏறி அவர் உயிரிழந்தார். காயம் அடைந்த கணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், லாரி ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story