கார் - லாரி மோதி பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
கார் - லாரி மோதி பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி - இந்திராணி தம்பதியர், தங்களது குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பி உள்ளனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அத்திமானம் என்ற இடத்தில் அவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சுப்பிரமணி, அவரது மனைவி, மகள்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்