ஆசிரியர்கள் அம்மா கோயில் வர அழைப்பு; மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை சர்ச்சை

ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புக்காக மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலுக்கு வருமாறு அந்த மாவட்ட கல்வி அலுவலர் அழைப்பு விடுத்துள்ளது ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியர்கள் அம்மா கோயில் வர அழைப்பு; மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை சர்ச்சை
x
ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புக்காக மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலுக்கு வருமாறு அந்த மாவட்ட கல்வி அலுவலர் அழைப்பு விடுத்துள்ளது ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை அன்று ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் பங்கேற்கும் இந்த நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினியும், மதிய விருந்தும் அளிக்கப்படும் என திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை விடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல் பேரில் அறிக்கை விடுத்ததாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்