வருகிற 16ம் தேதி முதல் அரியர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
x
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும், அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர்  என உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த முடிவுக்கு பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரியர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தொடக்க முதலே அண்ணா பல்கலைக்கழகம் கூறி வந்த நிலையில், முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 16ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை அரியர் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால், தனியார் கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்