மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது - உயர்நீதிமன்றம்

மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்களாக பராமரிக்கப்படுவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் என்றார். மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கூறிய நீதிபதிகள், தீபக்கின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்