லாரி சக்கரத்தில் விழுந்து தற்கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

சென்னையில் லாரியின் முன்பாக ஒருவர் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாரி சக்கரத்தில் விழுந்து தற்கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
x
சென்னையில் லாரியின் முன்பாக ஒருவர் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் யார்? விபத்து நடந்தது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விபத்தில் அவரின் தலை முழுவதுமாக சேதமடைந்ததால் அவர் யாரென்பதை கண்டறிய முடியவில்லை. இதனிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நீண்ட நேரமாக காத்திருந்து லாரியை பார்த்ததும் அவர் வேகமாக சக்கரத்தின் முன்னால் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்