மத்திய குழுவினர் சென்னை வருகை - கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்
தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளா் அஸ்சுதோஷ் அக்னி கோத்ரி மற்றும் மத்திய மீன்வளத்துறை ஆணையா் பால்பாண்டியன் தலைமையில், தலா 3 பேர் பேர் கொண்ட இரு குழுவினர் வருகை தந்துள்ளார். ஒரு குழுவினர் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கும், அதேபோல் மற்றொரு குழுவினர் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Next Story