தடுப்பணையை கட்ட எதிர்ப்பு - புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பரக்காணி பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை சிலர் நிறுத்த முயற்சிப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தடுப்பணையை கட்ட எதிர்ப்பு - புகார்
x
தேங்காய்பட்டிணம் துறைமுகம் அருகே உள்ள பரக்காணி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கடல்நீர் கலப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கடந்த 2018 ம் ஆண்டு தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பணை கட்ட தொடங்குவதற்கு முன்னர், ஆற்றங்கரையோரம் நிலத்தை வாங்கிய சிலர், தடுப்பணை பணிகளுக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வழக்கு தொடுத்துள்ளதாகவும், கட்டுமான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை பணியை நிறுத்துமாறு மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒருவேளை பணிகளை நிறுத்தினால் சாலையை முடக்குவோர் எனவும் எச்சரித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்