அனைவரின் பிரார்த்தனையால் சரத்குமார் நலம் - ராதிகா சரத்குமார்
தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார்.
தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், கொரோனா இன்னும் நம்மை விட்டு செல்லவில்லை என்றும் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story