கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கோரிய வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கோரிய வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
x
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை  உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில், போதிய சோதனைகள் மேற்கொள்ளாமல் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரமாக அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது,.  தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே பொதுமக்கள் உள்ளதால் கோவிசீல்டு, மற்றும் கோவாக்சின்  தடுப்பூசிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது,. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா  அவசரகால சூழ் நிலையில் இது போன்ற பொது நல மனுக்கள் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தது,. மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாமல்  இருந்து கொள்ளலாம்  என்றும் அதைவிட்டு மொத்தமாக மருந்துக்கு தடை கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,. இதனை தொடர்ந்து மனு தாரர் தனது மனுவை திருப்ப பெற்று கொள்வதாக கூறியதால் நீதிபதிகள்  மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவு பிறப்பித்தார்


Next Story

மேலும் செய்திகள்