தனியார் பள்ளி, கல்லூரியை சூறையாடிய கும்பல்

தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சூறையாடிய கும்பல், அதன் நிர்வாகியை கொல்ல முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளி, கல்லூரியை சூறையாடிய கும்பல்
x
தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சூறையாடிய கும்பல், அதன் நிர்வாகியை கொல்ல முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களின் தாளாளராக பிரான்சிஸ் உள்ளார். இவருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் விரிகோட்டை சேர்ந்த ஆனந்தராஜன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதனிடையே 50 பேர் கொண்ட ஒரு கும்பல், திடீரென கல்லூரிக்குள் நுழைந்து கண்ணாடி, கதவுகளை அடித்து நொறுக்கியது. மேலும் கல்லூரியின் தாளாளரையும் அந்த கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்