"நான் கடவுள்" எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...

நாமக்கல் மாவட்டத்தில், தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறுவன்...தன்னைச் சுற்றியிருப்பவர்களை எல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
நான் கடவுள் எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...
x
நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகம்... இங்கே வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட கொலை வெறியோடு ஒரு சிறுவன் கொண்டு வரப்பட்ட போது கட்டடங்களே அதிர்ந்தன.காலையில் இருந்து இந்தச் சிறுவன் தனது ஊரில் ஐந்து பேரை கடித்து கொலை செய்ய முயன்றிருக்கிறான். அதைப் பார்த்த அந்த ஊர் இளைஞர்கள், இவனுக்கு பதிலடி கொடுத்து கைகளைக் கட்டி இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். கண்களில் கொலைவெறியோடு தென்பட்ட இந்தச் சிறுவனின் பெயர் கண்ணனாம். தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தச் சிறுவன், "நானே சிவபெருமான்" என்றும் "என் கட்டை அவிழ்த்து விடுபவர்கள் நன்றாக இருப்பார்கள்" என்றும் சொன்ன போது, கூடியிருந்த கூட்டம் அதிர்ந்து போனது.மருத்துவமனைக்குள் வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த கண்ணனை அழைத்துப் போய் மயக்க ஊசி செலுத்துவதற்குள் மருத்துவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மயக்கம் தெளிந்த பிறகும் இந்தச் சிறுவனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என கால், கைகள் கட்டி வைக்கப்பட்டன. 
யார் இந்தச் சிறுவன்? இத்தனை தூரம் ஆபத்தான நபராக இவன் மாறியது எப்படி? - அதை அறிவதற்காக அவன் சொந்த ஊருக்கு பயணமானோம். 
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி, ரெட்டிக் காலனியைச் சேர்ந்த சிறுவன்தான் கண்ணன். வயது 17 தான் ஆகிறது. அதற்குள் கஞ்சா பழக்கம். சிறு வயது முதலே அம்மா இல்லை என்பதால் நல் வழிப்படுத்த ஆளில்லை. சமீப காலமாக தனக்குள்ளேயே பேசிக் கொண்டு, தன் வீட்டு பொருட்களை உடைத்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு சில நாட்களாகத்தான் ஊராரை காயப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.பைக்கில் பேய் வேகமெடுத்து பறப்பது, போகிற வருகிற பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் அழைப்பது, காயப்படுத்துவது என கண்ணனின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நிர்வாணமாக நின்றபடி ஊராரை வம்புக்கு இழுக்க ஆரம்பித்து விட்டார் இவர்.ஊரே கண்ணனை கஞ்சா போதை தலைக்கேறிய சிறுவன் என்றும் புத்தி பேதலித்தவர் என்றும் சொல்கிறது. ஆனால், பெற்ற தந்தை சண்முகம், ஊர் மக்கள் அடித்ததால்தான் தன் மகனுக்கு மூளை கலங்கிவிட்டது என்கிறார் பாசத்தோடு.எது எப்படியோ... இனி கண்ணன் இந்த ஊருக்கு திரும்பவே கூடாது. அப்படி திரும்பினால், பரிபூரணமாக குணமாகித்தான் திரும்ப வேண்டும். இல்லையேல் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.




Next Story

மேலும் செய்திகள்