மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18ந் தேதி மீன் பிடிக்க விசைப்படகில் கடலுக்கு சென்ற மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகியோர் இலங்கை கடற்படை தாக்குதலால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.அந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியின் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை  வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் மூலமாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்