அஸ்திவாரம் போடும் குழியில் விழுந்த சிறுமி - தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி பலியான சோகம்

திருச்சியில் மழைநீர் தேங்கிய அஸ்திவார குழியில் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்திவாரம் போடும் குழியில் விழுந்த சிறுமி - தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி பலியான சோகம்
x
திருச்சி விமான நிலையம் அருகே ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். கார் டிரைவரான இவருக்கு திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 5 வயது மகள் பாண்டிஸ்ரீ, தன் வீட்டுக்கு அருகே உள்ள காலி மனை பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த இடத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் போடுவதற்காக குழிகள் இருந்துள்ளது. இதில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் இதை அறியாத சிறுமி அந்த குழியில் தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர், தேடிய போது அஸ்திவார குழியில் சிறுமி மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்