"10, 12 ஆம் வகுப்பு - 40% பாடம் குறைப்பு" - விவரங்களை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
x
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் வரும், 19ஆம் தேதி திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்புகள் நடைபெற உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் முழுமையான அளவில் பாடத்திட்டங்களை நடத்த முடியாது என்பதால், பாடத்திட்டங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தன .
இந்நிலையில், 40 சதவிகித பாடங்களை குறைத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பாடத்திட்ட விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நாளை, மறுநாள் பள்ளி திறந்ததும் இது குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்