கோயிலில் உள்ள குடிநீர் கிணற்றில் மாசு - மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்- வேம்படி விநாயகர் கோயில் கிணற்றில் திடீரென துர்நாற்றம் வீசியது.
கோயிலில் உள்ள குடிநீர் கிணற்றில் மாசு - மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்- வேம்படி  விநாயகர் கோயில் கிணற்றில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது, கிணற்றில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்பதால், காட்டுத் தீயாய் தகவல் பரவியது. குடிநீர் கிணற்றில் திடீர் துர்நாற்றமும், மீன்கள் செத்து மிதந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிணற்றில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், சாதிய மோதல் உருவாக்கும் நோக்கில் சிலர் செயல்படுவதாக கூறிய பொதுமக்கள், அதை தடுக்குமாறு கோயில் நிர்வாகம் மற்றும், போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்