சுற்றுச்சூழல் துறை அதிகாரி வீட்டில் ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனுக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
x
சென்னை மாசுக் கட்டுப்பாட்டு துறையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் லஞ்சம் வாங்கியதாக கடந்த மாதம் ல​ஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே திருமயத்தில் அருகே உள்ள குளத்தூர்பட்டியில் உள்ள பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 6 பேர் கொண்ட போலீசார், பாண்டியனின் வீடு மற்றும் லாக்கரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்