அஞ்சலக கணக்கர் தேர்வை அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் - மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி செந்தில்குமார் கடிதம்

அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்தவேண்டும் என திமுக எம்பி சந்தில் குமார், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அஞ்சலக கணக்கர் தேர்வை அனைத்து பிராந்திய மொழிகளிலும்  நடத்த வேண்டும் - மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி செந்தில்குமார் கடிதம்
x
அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்தவேண்டும் என திமுக எம்பி சந்தில் குமார், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழில் நடத்தப்படும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி அளித்ததாக கூறியுள்ளார்.  இதே வாக்குறுதியை மத்திய அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள எம்பி செந்தில்குமார், இந்த ஆண்டு அஞ்சலக கணக்கர் தேர்வை அனைத்து பிராந்திய மொழிகளிலும் எழுத நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்