அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு - 6 வாரங்களுக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் வேலுமணி மற்றும் காமராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு - 6 வாரங்களுக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்
x
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில்  மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். ஆஜரான அவர், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த  பொதுத் துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வழக்குடன் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக கூறி, வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்