அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் தனியார் கல்லூரிகள் : விசாரணை நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உத்தரவு

அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் தனியார் கல்லூரிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் தனியார் கல்லூரிகள் : விசாரணை நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உத்தரவு
x
கொரோனோ பாதிப்பு காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரில் வரவழைத்து செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்கனவே அரசு அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. இதர ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி சில தனியார் கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்களையும் கல்லூரிகளுக்கு நேரடியாக வரவழைத்து, செமஸ்டர் தேர்வுகளை நடத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசின் உத்தரவை மீறி செயல்படும் இந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள் மீது புகார் நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்