கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் பலி - இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு

கரூரில் கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடூர மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னால் நடந்தது என்ன?
கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் பலி - இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு
x
கரூர் நகராட்சி பகுதியில் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ஜெயராம். இவரின் மகன் ஹரிஹரன். 23 வயதான இவர் சலூன் கடை நடத்தி வந்தார். 

அதே பகுதியை சேர்ந்த 20 வயதான மாணவி,  அங்குள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை படித்து வருகிறார். 

இவருக்கும் ஹரிகரனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதல்... இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவரவே மகளை அழைத்து கண்டித்துள்ளனர். 

இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள், ஹரிகரனையும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால் காதல் ஜோடிகளான இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். 

ஆனால் தொடர்ச்சியாக கொடுத்த நெருக்கடியால் ஹரிகரனிடம் கடந்த 2 மாதமாக எந்த வித தொடர்பும் இன்றி அந்த பெண் இருந்துள்ளார். காதலியை காணாமல் தவித்து போன ஹரிஹரன், தன்னுடனான காதலை தொடருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், இதற்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தனர். ஹரிஹரனை செல்போனில் தொடர்பு கொண்ட பெண்ணின் பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். 

தங்கள் எதிர்காலம் கருதி தான் பேச அழைக்கிறார்கள் என கனவுகளோடு கிளம்பி போன ஹரிஹரனுக்கு அங்கு காத்திருந்த விபரீதம் தெரிய வாய்ப்பில்லை. 

சிவன் கோவிலுக்கு சென்ற ஹரிகரனை பெண்ணின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுக்கவே, வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சுப்ரமணியபுரம் சினிமா பாணியில் மறைந்திருந்த ஒரு கும்பல், ஹரிஹரனை கொடூரமாக தாக்கியது. இதில் பலத்த காயங்களுடன் இருந்த அவரை ரோட்டில் தரதரவென இழுத்து வந்திருக்கிறது அந்த கும்பல்... பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் செல்போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்... 

Next Story

மேலும் செய்திகள்