பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் பேனர்கள் : உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் - ஆர்.எஸ். பாரதி கடிதம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் பேனர்கள் : உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் - ஆர்.எஸ். பாரதி கடிதம்
x
தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி  தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என்றும் அக்கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பேனர்கள் வைத்துள்ளது  நீதிமன்ற‌ அவமதிப்பாகும் என்று தெரிவித்துள்ள ஆர்.எஸ். பாரதி அவற்றை  உடனடியாக அகற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்