மின்சாரம் தயாரிக்கும் இடத்திலே மின்சாரம் இல்லை..!

மின்சார குறைபாட்டால் ஆன்-லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டி, முதல்வருக்கு ஒரு லட்சம் இ-மெயில் அனுப்பும் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மின்சாரம் தயாரிக்கும் இடத்திலே மின்சாரம் இல்லை..!
x
கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  ஓவேலி பேரூராட்சி பகுதியில் நில பிரச்சனையை காரணம் காட்டி பத்தாயிரம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  
குறிப்பாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கார நீர்மின் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இதே பகுதியில் வசிக்கும் தங்களுக்கே தடையில்லா மின்சாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு ஒரு லட்சம் புகார் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்