"மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு"
பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த பயணிகளில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த பயணிகளில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் உள்ள தேசிய நுண்கிருமி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 44 பேரின் சோதனை மாதிரிகளில் 12 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 32 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாகவும், அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனி பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story