விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்ல இருந்த விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்ல இருந்த விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால் 46 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்த விமானி விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இதையடுத்து ரத்து செய்யப்பட்ட விமானம் பழுது பார்க்கப்பட்டு இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story