மெரினா கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறம் சனிக்கிழமை மாலை 5 40 மணிக்கு சிறு காயங்களுடன் நான்கரை அடி நீளமுள்ள குட்டி டால்பின் கரை ஒதுங்கியது.
மெரினா கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்
x
சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறம் சனிக்கிழமை மாலை 5 40 மணிக்கு சிறு காயங்களுடன் நான்கரை அடி நீளமுள்ள குட்டி டால்பின் கரை ஒதுங்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த டால்பின் குறித்து மீனவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் விவேகானந்தர் இல்லம் அருகே முகாமிட்டிருக்கும் தீயணைப்பு துறையின் மெரினா மீட்புக் குழு வீரர்கள், பிரத்தியேக படகு மூலம் டால்பினை ஆழ்கடலுக்குள் சென்று விட்டனர்.  டால்பின் மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினரை அவர் வெகுவாக பாராட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்