கிராமங்களில் சுற்றித் திரியும் சிறுத்தை - வனப்பகுதியில் கொண்டு விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிராமங்களில் சுற்றித் திரியும் சிறுத்தை - வனப்பகுதியில் கொண்டு விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை
x
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை, ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. வனத்துறையினர் வைத்த கூண்டிலும் அந்த சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில், தொட்டகாஜனூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில், சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. அதை உடனடியாக பிடித்து, வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்