நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளின் நஞ்சுக்கொடியிலும் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்ற மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது...
நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
x
ஒரு தாயையும்-சேயையும் பிணைக்கும் முதல் இணைப்புதான் நஞ்சுக்கொடி... இதுதான் ஒரு பெண் கருவுற்றதும் அவருடைய உடலின் ஒரு அங்கமாக மாறும் சிசுவுக்கு ஊட்டச்சத்தை இரத்தமாக கொண்டு செல்கிறது.

ஆங்கிலத்தில் பிளசென்டா என அழைக்கப்படும் இந்த நஞ்சுக்கொடி, தாயிடம் இருந்து குழந்தைக்கு எந்தஒரு தொற்றும் பரவாமலும்... வீரியம் கூடிய மருந்துகளின் விளைவுகளை அண்டவிடாமலும்  பாதுகாக்கிறது

இத்தகைய மகத்தான பணியை செய்யும் இந்த நஞ்சுக்கொடியிலும் தற்போது பிளாஸ்டிக் துகள்கள் நுழைந்து இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய தகவல்... 

இத்தாலியில் குழந்தை பெற்ற 6 பெண்களின் நஞ்சுக்கொடியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், 4 பெண்களின் நஞ்சுக்கொடிகளில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
   
ஒவ்வொரு நஞ்சுக்கொடியிலும் வெறும் 4 சதவீத பகுதியை மட்டுமே ஆய்வு செய்ததாகவும்... அதிலே சுமார் 12 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது எனக் கூறியிருக்கும் விஞ்ஞானிகள், நாங்கள்  முழுவதையும்  பகுப்பாய்வு செய்திருந்தால் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்று திகைக்கிறார்கள். 
 
பல வண்ணங்களில் இருந்த இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டவையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.வெறும் 10 மைக்ரான் அளவு கொண்ட இந்த பிளாஸ்டிக் துகள்களால் குழந்தைக்கு செல்லும் ரத்தத்தில் பயணிக்கலாம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுவாசம், நீர், உணவு வாயிலாக தாய்மார்களின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.  
 
இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா கூறுவதை கேட்கலாம்...இன்று பூமியில் உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழமான பெருங்கடல் வரையிலும் வியாபித்திருக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்... மனிதன் வீசியெறியும் இவை உணவு, காற்று மற்றும் நீர் வழியாக அவனுக்கே திரும்பி வந்து விடுகிறது என்பது பல ஆய்வுகளில் வெளியாகியிருக்கும் உண்மை... மனித குலத்தின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு ஏதும் அறியாத பூமியில் ஜனனிக்க காத்திருக்கும் ஒரு சிசுவும் விலைகொடுக்க தொடங்கியிருக்கிறது என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயமாகும்....



Next Story

மேலும் செய்திகள்