பட்டியலின ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் - காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் - காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி பட்டியலின பெண் தலைவர் அமிர்தம், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஊராட்சியில் நடைபெறம் பல்வேறு முறைகேடுகளை தட்டிகேட்பதால், மிரட்டலுக்கு ஆளாகுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் மற்றும் முன்னாள் தலைவரிடம் இருந்து தொடர் மிரட்டல் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி டி.ரவீந்திரன், இரண்டு வாரங்களில் தமிழக அரசும், காவல்துறையும் விளக்கம் அளிக்கும்படி  உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்