சமூக நீதிக்கான அரசியல் நிலைநாட்டப்பட வேண்டும் - திருமாவளவன் பேட்டி

தமிழகத்தில் மீண்டும் சமூக நீதிக்கான அரசியல் நிலைநாட்டப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக நீதிக்கான அரசியல் நிலைநாட்டப்பட வேண்டும் - திருமாவளவன் பேட்டி
x
தமிழகத்தில் மீண்டும் சமூக நீதிக்கான அரசியல் நிலைநாட்டப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்வது ஜனநாயகத்தின் கடமை என்றார். சனாதன சக்திகள் வெவ்வேறு வடிவம் மற்றும் பெயர்களில் தமிழகத்தில் வேரூன்ற பார்ப்பதாகவும், அவற்றை தடுக்க, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்