ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டதாக புகார் : அதிமுக முன்னாள் நிர்வாகி மீது டிஜிபியிடம் புகார் மனு

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டதாக புகார் : அதிமுக முன்னாள் நிர்வாகி மீது டிஜிபியிடம் புகார் மனு
x
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவிராமன் என்பவருக்கு சொந்தமாக போளூர் சாலையில் 7188 சதுர அடி அளவுள்ள காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரான பெருமாள் நகர்  ராஜன் கட்சி  அலுவலகத்திற்காக வாடகைக்கு எடுத்ததாகக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக அந்த நிலத்திற்கு வாடகை கொடுக்காமல் இருந்ததால் சஞ்சீவிராமன் பலமுறை கேட்டுள்ளார். போலீசில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். இதில் தன்னுடைய நிலத்தை மீட்டு தருவதோடு, பெருமாள் நகர் ராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்