ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு அனுமதி

தமிழகத்தில், ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு அனுமதி
x
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எருதுவிடும் நிகழ்வில் 150 வீரர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறந்த வெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் ஐம்பது சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில், கோவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்