மது மயக்கத்தால் நேர்ந்த பயங்கரம் - முதியவரை தீயிட்டு கொளுத்திய 5 சிறுவர்கள்

சாலையோரம் தூங்கி கொண்டிருந்த முதியவரை எழுப்பி லைட்டர் கேட்ட சிறுவர்கள் மது போதையில் அந்த முதியவரையே தீயிட்டு கொளுத்தி கொன்றுள்ளனர்...
மது மயக்கத்தால் நேர்ந்த பயங்கரம் - முதியவரை தீயிட்டு கொளுத்திய 5 சிறுவர்கள்
x
60 வயதான அந்த முதியவர் பெயர் சந்திரன்... நாகர்கோவில் அருகே உள்ள இருளப்ப‌புரத்தை சேர்ந்தவர்... பத்தாண்டுகளுக்கு முன் மனைவி மகன்களுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம் சந்திரன்.. அன்று முதல், பகலில் கூலிவேலை, இரவில் கிடைக்கும் இடத்தில் உறக்கம் என பொழுதை கழித்து வந்த சந்திரன், திடீரென உடல் பாதி எரிந்த நிலையில் ஒரு வீட்டு முன் பிணமாக கிடந்தார்...

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் முதியவரை கொடூரமாக எரித்து கொன்றது வெளிச்சத்துக்கு வந்த‌து... 

சம்பவத்தை அறிந்த போலீசார், சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மதுரையை சேர்ந்த இந்த 5 சிறுவர்களும், பழைய இரும்பு கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்... சம்பவத்தன்று, ஒரு சிறுவன் தன் காதலியுடன் சண்டையிட்டு விட்டானாம்... இதன் காரணமாக அந்த சிறுவன் சக நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்துள்ளான்... இதை தொடர்ந்து 5 பேரும் சாலையில் வரும் வழியெங்கும் கார், வீட்டு ஜன்னல் என கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் கல் ஏறிந்து சேதப்படுத்தியுள்ளனர்... 

அப்போது தான் சாலையோரம் கிடந்த அந்த அப்பாவி முதியவர் இவர்களது கண்ணில் பட்டுள்ளார்... முதியவரிடம் சென்று தீப்பெட்டி கேட்டுள்ளனர்.  

விபரீத‌த்தை அறியாத முதியவர் சந்திரன், தீப்பட்டி இல்லை, லைட்டர் தான் இருக்கிறது என அப்பாவியாய் கூறி இருக்கிறார்... 
இதையடுத்து அவரிடம் இருந்து லைட்டரை வாங்கிய சிறுவர்கள், வேட்டியில் தீயை வைத்துவிட்டு கொஞ்சமும் அச்சமின்றி அங்கிருந்து நடந்து சென்றிருக்கின்றனர்.. 5 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

ஈவு இறக்கமின்றி முதியவரை தீயிட்டு கொளுத்தி கொடூரமாக கொன்றனர் என்பதை விட, இளம் பிஞ்சுகளை சுய நினைவை இழக்க செய்து, முதியவர் உயிரை பலிகொண்ட மது மயக்கம்,  இன்று அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்....

Next Story

மேலும் செய்திகள்