விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட மீனவ மக்கள் - குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மீனவ மக்கள் ஒன்றுதிரண்டு ஆதரவு தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட மீனவ மக்கள் - குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மீனவ மக்கள் ஒன்றுதிரண்டு ஆதரவு தெரிவித்தனர். புனித அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயத்தின் முன்பு, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவ மக்கள் இன்று காலை திரண்டனர். அவர்கள், குளச்சல் மறை வட்டார முதல்வர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் தலைமையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்