நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: "குற்றவாளி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை" - அமைச்சர் பெஞ்சமின் பேட்டி

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: குற்றவாளி யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை - அமைச்சர் பெஞ்சமின் பேட்டி
x
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசின் திட்டங்களை துவக்கி வைத்து பேசிய அவர், நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தற்போது விசாரணை குறித்த கருத்துகளைத் தெரிவிக்க முடியாது என்றார். அத்துடன், சட்டத்துக்கு முன்பு யாராக இருந்தாலும் நிச்சயமாக அரசும், காவல்துறையும்  உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்