டாடா சுமோ மீது மோதிய காய்கறி லாரி - 8 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை

தக்கலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டாடா சுமோ மீது மோதிய காய்கறி லாரி - 8 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை
x
தக்கலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் சகாயதாஸ். இவர், தனது இரண்டு மகள், மகன் மற்றும் உறவினர் உட்பட 8-பேருடன் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், டாட்டா சுமோ வாகனத்தில் சென்றுள்ளார்.  அப்போது, தக்கலை அருகே எதிரே வந்த காய்கறி லாரி, கார் மீது மோதியது. இதில், 8-பேரும் படுகாயமடைந்தனர். இருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாரி டிரைவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த விபத்து குறித்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்