கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும்

கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தை, கல்லூரிகள் திருப்பி செலுத்த, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும்
x
நடப்பு 2020- 21ம் கல்வியாண்டில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், கல்லூரிகளில் இருந்து விலக நேர்ந்தால், முழுக் கல்விக் கட்டணத்தையும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக நிர்வாகங்கள், முழுமையாக மாணவர்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்