இளைஞர் கழுத்து அறுத்து கொலை - நண்பர்கள் வெறிச்செயல்
சென்னை புதுப்பேட்டையில் நண்பர்களால் இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பான பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். மனைவியை இழந்த இவர் மகனுடன் புதுப்பேட்டையில் உறவினர் வீட்டில் வசித்தவாறு, மூன்று சக்கர வாகனம் ஓட்டும் கூலி தொழிலை செய்துவந்துள்ளார். நேற்று வேலையை முடித்துவிட்டு வண்டியிலே தூங்கியுள்ளார். அப்போது அவருடைய நண்பர்களான இளவரசன், அருண்குமார் மற்றொரு நபருடன் குடிபோதையில் வந்து வாக்குவாதம் செய்துள்ளனர். தனது மனைவியிடம் எப்படி நீ பேசுவாய் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியபோது மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பேட்டையில் இளைஞர் சந்தோஷ் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்துவந்த எழும்பூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள், கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். கொலையில் ஈடுபட்டதாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இரவில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story