"மின்வாரியத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை கிடையாது" - மின்வாரிய தலைமை பொறியாளர் உத்தரவு

ஐடிஐ படித்தவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை கிடையாது என்றும், அனைத்து வேலைகளையும் தனியாருக்கு வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை கிடையாது - மின்வாரிய தலைமை பொறியாளர் உத்தரவு
x
ஐடிஐ படித்தவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை கிடையாது என்றும், அனைத்து வேலைகளையும் தனியாருக்கு வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரியத்தின் இந்த அறிவிப்பு, ஐடிஐ படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஆட்களை நியமித்து கொள்ள அனுமதி அளித்துள்ள மின்சார வாரியம்,1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மூலம் நியமனமாகும் ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரத்து 360  ரூபாய் ஊதியம் வழங்கவும், ஆண்டுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு என்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்