வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து பேரணி

புதிய வேளாண் திருத்த சட்டத்தை ஆதரித்து, வரும் 25ஆம் தேதி முதல், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், ஐந்து மாவட்டங்களில் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து பேரணி
x
புதிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள், தலைநகர் டில்லியில் பல நாட்களாக போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாளை திமுக தலைவர் முக.ஸ்டாலின், சென்னையில் தோழமை கட்சிகளுடன் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளார். எனவே, தமிழக பாஜக சார்பில் புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பேரணி நடத்த தமிழக பாஜக முடிவு செய்து உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கோவையிலும், 26ஆம் தேதி ஈரோட்டிலும், 27ஆம் தேதி தஞ்சாவூரிலும், 28ஆம் தேதி மதுரையிலும், 29ஆம் தேதி கடலூரிலும், வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், இந்த பேரணிகள் நடைபெற உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்