முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு
x
கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்ணயித்த தொகை, மிக குறைவாக இருப்பதாக கூறி, இந்திய தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம், உண்மையான செலவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு நிர்ணயிக்கப்படவில்லை எனவும், மருத்துவமனைகளுடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கான கட்டணங்களை முறையாக கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஜனவரி 11ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்