"கொரோனா தொற்றை வேகமாக கட்டுப்படுத்தியது தமிழக அரசு" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது, கொடிய கொரோனா தொற்றை வேகமாக கட்டுபடுத்தியது தமிழக அரசு என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது, கொடிய கொரோனா தொற்றை வேகமாக கட்டுபடுத்தியது தமிழக அரசு என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசின்
கொரோனா தடுப்பு செயல்பாடுகளை பிரதமரே வெகுவாக பாராட்டியதாக கூறியுள்ளார்.ஊரடங்கு மற்றும் தளர்வுகளை சரியாக கையாண்டு நோய்தொற்றை தமிழக அரசு குறைத்துள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.
Next Story