சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை -3 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணை ஆணையத்தில் இன்று 6 அதிகாரிகள் ஆஜராகினர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா 280 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு தேவையான ஆவணங்களை விசாரணைக்குழுவிடம் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்படைக்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகள் இன்று நீதிபதி கலையரசனின் விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினர். அத்துடன் மூன்று அட்டை பெட்டிகளில், விசாரணை தொடர்பான ஆவணங்களை அவர்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் ஒருமணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
Next Story