கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம்  உத்தரவு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, தனிமைப்படுத்துதல் விதிகளை மீறுதல், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுதல் மற்றும் கடைகளில் விதிகளை மீறுவோருக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், அபராதம் விதிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்