பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்
x
சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூரம் பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் முடங்கிக் கிடந்த ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கு எதிராக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவானதாக, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் தகவல் வெளியிட்டது. 

இந்தத் தகவல் வெளியான அதேவேளையில், சென்னை வண்ணாரப்பேட்டையில், வக்கிர மனம் படைத்த மனித மிருகங்களால் சத்தமில்லாமல் சீரழிக்கப் பட்டிருக்கிறார் 15 வயது சிறுமி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாருக்குப் பிறகே, இந்தக் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

விசாரணையில் இறங்கிய போலீசார், இதில் மூளையாக செயல்பட்ட மதன்குமார், ஷகீதாபானு, செல்வி மற்றும் சந்தியா உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக பிரமுகரான ராஜேந்திரனும், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் கைது செய்யப்பட்டனர்.   

இதன்பிறகு வெளியான ஒவ்வொரு தகவலுமே, திடுக்கிடச் செய்தன. சிறுமியை நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்ததும், கடந்த சில மாதங்களில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக கிடைத்த பட்டியலில், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என சமூகத்தில் மதிக்கத்தக்க பொறுப்புகளை வகிப்பவர்கள் இடம் பெற்றிருப்பதுதான் வேதனையின் உச்சம். 

இதுதொடர்பான விசாரணையில், காவல்துறை தீவிரம் காட்டியுள்ள நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாகினும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு!


Next Story

மேலும் செய்திகள்