"கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவி்த்துள்ளார்.
கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது - அமைச்சர் எம்.சி. சம்பத்
x
ஒசூர் பத்தளப்பள்ளி பகுதியில் சிறு-குறு தொழிற்சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஹேண்ட்செட் உற்பத்தியில் தமிழகம் உலக அளவில் 10 இடங்களுக்குள் வர தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்