மாவட்ட ஆட்சியர், அதிமுகவினரை முற்றுகையிட்ட பெண்கள் - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரையும், அதிமுகவினரையும் பெண்கள் முற்றுகையிட்டனர்.
தேவதானப்பட்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 14, 15 மற்றும்16-வது வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாவும் குற்றம்சாட்டினர். அப்போது, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.
Next Story