போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
x
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காமாட்சி என்ற பெண் ஊழியர் போலி கல்வி சான்றிதழை கொடுத்து பணியாற்றி வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகம் செய்த சோதனையில் அது உறுதியானதை தொடர்ந்து காமாட்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேநேரம் பல ஊழியர்கள் இவரைப் போல போலி சான்றிதழ்கள் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அனைத்து ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களையும் சரிபார்க்கும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்