செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.
செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்
x
சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர், ஆண்டலின் ரமேஷ். இவர் நேற்று காலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, மாதவரம் ரவுண்டானா பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு தப்பிச் செல்பவர்களை பார்த்துள்ளார். உடனே தாமதிக்காமல், அவர்களை விரட்டிச் சென்று, மாத்தூர் அருகே அவர்களை மடக்கினார். இதில் ஈடுபட்ட ஒருவர் தப்பிவிட, மற்றொருவரை உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனத்தை பிடித்தபடியே துரத்திச் சென்று ஆண்டலின் ரமேஷ் பிடித்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இது ஏதோ திரைப்படத்தில் வரும் காட்சியல்ல... நிஜ ஹீரோவான உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் செல்போன் திருடர்களை துரத்திப் பிடித்த காட்சி என பாராட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்