"நிவர் புயலை எதிர்கொள்ள மின்துறை தயாராக இருக்கிறது" - அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றவும் தேவையான உபகரணங்கள் உள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Next Story